Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி, மார்ச்.26: தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராணி ஸ்ரீகுமார் செண்டை மேளம் முழங்க 100க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோரிடம் வேட்போனு தாக்கல் செய்தார்.
முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுடன் செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்களின் போது திமுக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.